VINU'S BLOG
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us

​SPIRITUAL CONTENTS

Tamil Spiritual Articles

சூரியனார் கோவில் தல அமைப்பு:-

2/8/2020

0 Comments

 

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான "சூரியனார் கோவில் ". மேற்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக் கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் , நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக " சூரிய தேவன் " இடப் புறம் உஷா தேவியுடனும், வலப் புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்.
 
இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர். கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும். 12 ஞாயிற்று கிழமைகள் இத் தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு. பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன், வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாணடன், தினகரன், பகலவன் என பல்வேறு பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு, ஆட்சி திறம் போன்றவற்றை அளிப்பவன்.
  
சூரிய தசா புத்தி நடப்பவர்கள், சூரிய பகவானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொள்வதாலும், மாணிக்கத்தை அணிவதாலும், ஞாயிற்று கிழமைகள் விரதம் இருப்பதாலும், சிவப்பு நிற பசு மற்றும் தானியங்களை தானம் செய்வதாலும், சூரிய நமஸ்காரம் மற்றும் சூரியனார் கோவில் வழிபாட்டாலும் கிரக தோஷ நிவர்த்தி பெறலாம். சிவ சூரிய நாராயணனாக சூரிய பெருமான் குடி கொண்டுள்ள இத் தலத்தில் உட் பிரகாரத்தில் மற்ற எட்டு நவக்கிரக நாயகர்களும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். மற்ற ஆலயங்களை போலல்லாது இத் திருத்தல வழிபாடு சற்றே வேறுபட்டது. மனதில் எப்படிப்பட்ட சஞ்சலங்கள் இருந்தாலும், எத்தகைய ஆபத்துகளில் அகப்பட்டு கொண்டாலும், தாங்க முடியாத துயரங்கள் ஆட்கொண்டாலும் " ஆதித்ய ஹிருதயத்தை " மனத் தூய்மையுடன் பாராயணம் செய்தால் அல்லல்களும், துன்பங்களும் வந்த சுவடே தெரியாமல் மறைந்தோடும்.
  
🔯சூரியனார் கோவில் வழிபாடு
மற்ற ஆலயங்களை போலல்லாது, இத் திருத் தல வழிபாடு சற்றே வேறுபட்டது. வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார் கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள " திருமங்கலக்குடி " சென்று " பிராணவரதரையும் ", அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள் தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும்.
 
பின்னர், நடராஜரையும், சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு, மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம் வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும்.அதன் பிறகு, வெளிப் பிரகாரம் வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும், புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும் மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும்.
 
கடைசியாக சுக்கிர பகவானையும் , ராகுவையும் வழிபட வேண்டும். ( செல்லும் முறை அறிய அம்புக் குறி இடப்பட்டுள்ளது ). மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம் வழியாக கோவிலை 9 முறை இடமாக ( மற்ற ஆலயங்களை போல வலமாக அல்ல ) வர வேண்டும். வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம் சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம்.
 
சூரிய பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும் ராசி    சிம்ம ராசிக்கு நவக்கிரகங்களுக்கு நடுவில் அதி தேவதை  அக்கினி ப்ரத்யதி தேவதை உருத்திரன தலம்  சூரியனார் கோயில் வாகனம்   ஏழு குதிரை பூட்டிய தேர் நிறம் சிவப்பு உலோகம் தம்பாக்கு தானியம்  கோதுமை மலர் செந்தாமரை வஸ்திரம் சிவப்பு ஆடை ரத்தினம் மாணிக்கம் நைவேத்யம கோதுமை சக்ரான்னம் சமித்து வெள்ளெருக்கு தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர்.
 
கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும்.  12 ஞாயிற்று கிழமைகள் இத்தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு. 

Picture
0 Comments



Leave a Reply.



    ​Categories

    All
    Siva Puranam
    அறுபத்து மூன்று நாயன்மார்கள்
    மஹா சிவராத்திரி
    மாசிமகம்

    Archives

    March 2020
    February 2020

Home

About Us

PRIVACY POLICY

Contact

Copyright © 2020
  • Home
  • HEALTH TIPS
    • Ladies
    • Heart
    • Liver
    • EYES
    • General
  • BEAUTY TIPS
    • Skin Care
    • Glow Tips
    • Lips
    • Dark Circle
    • Hair Care
  • TAMIL KAVITHAI
    • Love Feeling
    • Love Failure
    • Motivational
    • Happiness
    • Friendship
    • Birthday Wishes
    • General
  • SPIRITUAL CONTENTS
  • FOOD RECIPES
    • Veg
    • Non - Veg
    • Sweets
    • Snacks
    • General Tips
  • THIRUKURAL
    • அறத்துப்பால்
    • பொருட்பால்
    • இன்பத்துப்பால்
  • Contact
    • Privacy Policy
    • About Us